ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரே ஒரு படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் யார் என்றால் அது சாய் பல்லவி தான். 'பிரேமம்' மலையாள படத்தில் மலர் டீச்சர் என்ற வேடத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரும் புகழ்பெற்றார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பலரும் முயன்றனர்.
பிரேமம் படத்துக்குப் பிறகு ஒரேயொரு மலையாளப்படத்தில் நடித்தவர் அதன்பின்னர் 'FIDDA' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். சேகர் காமுலா இயக்கிய இந்த படமும் சாய் பல்லவிக்கு டோலிவுட்டில் நல்ல அறிமுகத்தை தந்தது.
அதன் பிறகு 'கரு' படத்தின் மூலம் தற்போது கோலிவுட்டுக்கு வந்துள்ளார் சாய் பல்லவி. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்த படம் 'கரு கலைப்பு' சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை அம்சம் கொண்ட படமாம். இந்த படத்தில் 4 வயது குழந்தைக்கு தாயாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.