அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் தமிழகத்தை சேர்ந்த தங்கமகன் மாரியப்பன். இவரது வாழ்க்கை "மாரியப்பன்" என்ற பெயரில் சினிமாவாக உருவாக உள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, தனுஷ் தனது சொந்த பேனரில் தயாரிக்க உள்ளார்.
மாரியப்பன், திரு.வி.க., பூங்கா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரிடத்தில் தனது வாழ்க்கை படம் குறித்து கேட்டபோது, அதற்கு பதிலளித்த மாரியப்பன்... என் வாழ்க்கை தொடர்பான படம் உறுதியாகவில்லை, இன்னும் பேச்சுவார்த்தை அளவில் தான் இருக்கிறது. என் வாழ்க்கையை படமாக என் உறவினர்கள் சிலர் எடுக்க இருப்பதாக வந்த தகவலும் முற்றிலும் பொய்யானது.
மாணவர்கள் காதலில் தோல்வியடைந்தால் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். அது தவறு என திரு.வி.க., பூங்கா படம் எடுத்துரைக்கிறது. நானும் காதலித்திருக்கிறேன். நான் காதலித்தது விளையாட்டை. சில நேரங்களில் எனக்கும் சில கஷ்டமான தருணங்கள் அமைந்திருக்கின்றன. அன்று நான் தவறான முடிவு எடுத்திருந்தால் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன். நான் இன்றைக்கு இவ்வளவு தூரம் சாதித்ததற்கு என் அம்மா தான் முக்கிய காரணம். கஷ்டங்களை தாங்கினால் தான் வெற்றி பெற முடியும் என்றார்.