அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
துணிச்சலான, புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய் டி.வி என்றைக்குமே முன்னணியில் இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து அறிமுகப்படுத்துகிறது திரிலிங்கான யெஸ் ஆர் நோ என்கிற கேம் ஷோவை.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர் ஒரு காரியத்தை செய்வார். பார்வையாளர்களாக இருக்கிறவர்கள் அவர் அதை செய்வாரா மாட்டாரா என்பதை யெஸ் ஆர் நோ சொல்லி தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக ஒரு சிறுமியின் தலையில் ஆப்பிளை வைத்து அதனை தூரத்திலிருந்து ஒருவர் அம்பால் அந்த ஆப்பிளை உடைப்பார் என்பது போட்டி. இது அவரால் முடியுமா முடியாதா என்பது எஸ் ஆர் நோவுக்கான விஷயம். இப்படி 128 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்களிலிருந்து ஒருவர் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு பெருந் தொகை பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி நாளை (23ந் தேதி) தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதனை பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் சினிமா நடிகர் ஜெகன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரமும் பல துறைகளில் சாதனை படைத்த நான்கு நட்சத்திர வீரர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.