பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நான் அரசியலுக்கு வருவது உறுதி; தமிழக மக்களுக்காக முதல்வராக எனக்கு விருப்பம் உள்ளது என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், நடிகர் கமலை சென்னையில் நேற்று சந்தித்து பேசினார். இதனையடுத்து தனியார் பத்திரிக்கைக்கு கமல் பேட்டியளித்தார்.
நடுநிலைவாதி : பேட்டியில் அவர் கூறியதாவது: அரசிலில் நுழைவது என்பது தலையில் முள் கிரீடம் சூட்டுவது போன்றது. மக்கள் இடதுசாரியையோ, வலதுசாரியையோ விரும்பவில்லை. அதனால் நான் சரியான நடுநிலைவாதியாகவே இருக்க விரும்புகிறேன். அரசியலில் எனது நிறம் கருப்பு தான். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளடங்கியுள்ளது.
முதல்வராக விருப்பம் : புதிய தலைமுறை அரசியல்வாதிகளை நாம் கண்டெடுக்க வேண்டும். அப்பொழுது தான் புதைகுழியாக இருக்கும் அரசியலை வசிப்பிடமாக மாற்ற முடியும். நான் அரசியலுக்கு வருவது உறுதி. என் முடிவை அறிவிப்பதற்கு முன்பாக நான் என்னை தயார்படுத்தி வருகிறேன். சிறந்த வழிகாட்டுதலுடன் மக்களை சந்திப்பேன். தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் உள்ளது.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.