Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெருகும் நள்ளிரவு பார்ட்டிகள்: அதிகரிக்கும் விபத்துக்கள்

22 செப், 2017 - 10:17 IST
எழுத்தின் அளவு:
Party-culture-raising-in-Tamil-cinema

பாலிவுட் சினிமா கலாச்சாரம் போன்று தமிழ் சினிமாவிலும் நள்ளிரவு பார்ட்டி கலாச்சாரம் பெருகி வருகிறது. படத்தின் துவக்க விழா, வெற்றி விழா, பிறந்த நாள், திருமண நாள், காதலை சொன்ன நாள், பிரிந்த நாள் என்று ஏதோ ஒரு காரணத்துக்காக பார்ட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பார்ட்டிகள் நகரத்தை விட்டு சற்று தூரத்தில் உள்ள மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலை அல்லது படப்பை போன்ற புறநகர்களில் விடிய விடிய நடக்கிறது. சில பார்ட்டிகளை நடிகைகளே நடத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மதுபாணங்களில் துவங்கும் இந்த பார்ட்டிகள் நள்ளிரவு இரண்டு மணி வரை நடக்கும். இதுபோன்ற பார்ட்டி விஷயங்கள் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் முன்னணி நடிகர், நடிகைகள் கூட டிரைவர் வைத்துக் கொள்ளாமல் தாங்களே வாகனத்தை ஓட்டி வருகிறார்கள். அளவாக குடித்து விட்டு சென்று விடலாம். போலீஸ் தடுத்தால் செல்வாக்கால் தப்பித்து விடலாம் என்பது இவர்கள் எண்ணமாக இருக்கிறது. ஆனால் அதையும் மீறி விஷயம் வெளியில் வந்து விடுகிறது.

நேற்று அதிகாலை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய நடிகர் ஜெய் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டுக்கு செல்லும் வழியில் அடையாறு பாலத்தில் காரை மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அதே காரில் மப்பில் படுத்துக் கிடந்திருக்கிறார் பிரேம்ஜி அமரன். காருக்கு காப்பீடு இருக்கும் பைசா செலவு இல்லாமல் அதனை சரி பண்ணி விடுவார்கள். ஆனால் யாரோ ஒரு அப்பாவி உயிர் போயிருந்தால் யாரால் அதை திருப்பிக் கொடுக்க முடியும் என்ற இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

இதே ஜெய்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு முதியவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். நல்ல வேளையாக அந்த முதியவர் தப்பினார். அப்போதே போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து அவரது ஓட்டுனர் உரிமத்தை பறித்திருந்தால் நேற்று இந்த விபத்து நடந்திருக்காது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அருண் விஜய் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகிலேயே குடித்து விட்டு வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்தினார். ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ஆழ்வார்பேட்டையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இவர்கள் அனைவரும் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவை வெளியில் வந்த சம்பவங்கள். ஆனால் வெளியில் வராமல் மூடி மறைக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய இருக்கிறது. பாலிவுட் போன்று கோலிவுட்டில் பெருகி வரும் பார்ட்டி கலாச்சாரத்தால் கலங்கி நிற்கிறது கோடம்பாக்கம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in