மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பாலிவுட் சினிமா கலாச்சாரம் போன்று தமிழ் சினிமாவிலும் நள்ளிரவு பார்ட்டி கலாச்சாரம் பெருகி வருகிறது. படத்தின் துவக்க விழா, வெற்றி விழா, பிறந்த நாள், திருமண நாள், காதலை சொன்ன நாள், பிரிந்த நாள் என்று ஏதோ ஒரு காரணத்துக்காக பார்ட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பார்ட்டிகள் நகரத்தை விட்டு சற்று தூரத்தில் உள்ள மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலை அல்லது படப்பை போன்ற புறநகர்களில் விடிய விடிய நடக்கிறது. சில பார்ட்டிகளை நடிகைகளே நடத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு மதுபாணங்களில் துவங்கும் இந்த பார்ட்டிகள் நள்ளிரவு இரண்டு மணி வரை நடக்கும். இதுபோன்ற பார்ட்டி விஷயங்கள் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் முன்னணி நடிகர், நடிகைகள் கூட டிரைவர் வைத்துக் கொள்ளாமல் தாங்களே வாகனத்தை ஓட்டி வருகிறார்கள். அளவாக குடித்து விட்டு சென்று விடலாம். போலீஸ் தடுத்தால் செல்வாக்கால் தப்பித்து விடலாம் என்பது இவர்கள் எண்ணமாக இருக்கிறது. ஆனால் அதையும் மீறி விஷயம் வெளியில் வந்து விடுகிறது.
நேற்று அதிகாலை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய நடிகர் ஜெய் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டுக்கு செல்லும் வழியில் அடையாறு பாலத்தில் காரை மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அதே காரில் மப்பில் படுத்துக் கிடந்திருக்கிறார் பிரேம்ஜி அமரன். காருக்கு காப்பீடு இருக்கும் பைசா செலவு இல்லாமல் அதனை சரி பண்ணி விடுவார்கள். ஆனால் யாரோ ஒரு அப்பாவி உயிர் போயிருந்தால் யாரால் அதை திருப்பிக் கொடுக்க முடியும் என்ற இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.
இதே ஜெய்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு முதியவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். நல்ல வேளையாக அந்த முதியவர் தப்பினார். அப்போதே போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து அவரது ஓட்டுனர் உரிமத்தை பறித்திருந்தால் நேற்று இந்த விபத்து நடந்திருக்காது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அருண் விஜய் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகிலேயே குடித்து விட்டு வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்தினார். ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ஆழ்வார்பேட்டையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இவர்கள் அனைவரும் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவை வெளியில் வந்த சம்பவங்கள். ஆனால் வெளியில் வராமல் மூடி மறைக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய இருக்கிறது. பாலிவுட் போன்று கோலிவுட்டில் பெருகி வரும் பார்ட்டி கலாச்சாரத்தால் கலங்கி நிற்கிறது கோடம்பாக்கம்.