தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிறைவாசம் சென்று திரும்பியிருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பூமி என்ற உணர்வுப்பூர்வமான படம் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளித்திரையில் தோன்ற இருக்கிறார். தன் திரையுலகம் ரீ-என்ட்ரி பற்றியும், பூமி படம் பற்றியும் நமக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...
பூமி படத்தில் நடிக்க என்ன காரணம்?
பூமி படத்தின் கதை தான் முக்கிய காரணம். இந்த கதையை கேட்டதும், இப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன். அப்பா - மகள் இடையேயான உறவை பற்றி பேசுகிற படமாக இது இருக்கும். ஒரு சிறிய குடும்பத்தில் வாழும் அப்பா - மகள் வாழ்க்கையில் ஒரு பிரச்னை வருகிறது, அந்த பிரச்னை அந்த குடும்பத்தை எந்த நிலைக்கு கொண்டு போகிறது என்பது படத்தின் உணர்வுப்பூர்வமான கதை. பெண் குழந்தைகளை காப்போம், அவர்களுக்கு கல்வி பயிற்றுவிப்போம் என்று பேசுபவன் நான், அந்த காரணமும் என்னை இப்படத்தில் நடிக்க வைக்க உந்துதலாய் இருந்தது.
உங்களின் ரீ-என்ட்ரி படமாக முன்னா பாய் பட தொடர்ச்சியை ஏன் தேர்வு செய்யவில்லை?
நீங்கள் சொல்வது உண்மை தான். எனக்குள்ளும் அந்த ஆசை இருந்தது. இருந்தாலும் பூமி படத்தின் கதை அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டது. பூமி படத்தின் கதையை கேட்கும் முன்பே நான் நிறைய கதைகள் கேட்கேடன். ஆனால் நான் கேட்ட கதைகளிலேயே பூமி தான் என்னை மிகவும் கவர்ந்தது.
ஓமங் குமார் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி சொல்லுங்க?
மிகவும் திறமையான இயக்குநர், நல்ல மனிதர். ஒரு நடிகரிடம் எப்படி வேலை வாங்குவது, எந்தளவுக்கு நடிப்பு திறனை வெளிக்கொண்டு வருவது என்பதை நன்கு உணர்ந்தவர். அவருடன் வேலை பார்த்த அனுபவம் சிறப்பாக இருந்ததால் மீண்டும் அவருடன் ஒரு படத்தில் பணியாற்ற உள்ளேன். ஆனால் அந்தப்படத்தில் அவர் தயாரிப்பாளர் மட்டும் தான், வேறு ஒருவர் இயக்குகிறார்.
நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படிப்பட்ட அப்பா?
உண்மையை சொல்கிறேன், நான் கண்டிப்பான அப்பா கிடையாது, ஆனால் என் பேச்சை பிள்ளைகள் கேட்க வேண்டும் என்று நினைப்பவன். வீட்டிற்கு வந்துவிட்டேன் என்றால் நண்பர்களுடன் நேரத்தை செலவிட மாட்டேன். சிலர் குழந்தைகளிடம் நண்பர் போன்று பழகுகிறார்கள். என்னை பொறுத்தமட்டில் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விட வேண்டும். அவர்களை உங்கள் நண்பர் போன்று பாவித்தால் உங்கள் கையை விட்டு போய்விடுவார்கள். ஆகையால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுதும் நல்ல பெற்றோர்களாக இருங்கள்.
உங்களின் அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க?
பூமியை தொடர்ந்து சாகிபி பிவி, கேங்ஸ்டர் 3, டோர்பாஸ், மலாங், முன்னா பாய் படத்தின் தொடர்ச்சி போன்ற படங்களில் நடிக்கிறேன். இதுதவிர அஜய் தேவ்கன் தயாரிப்பில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடிக்க உள்ளேன்.
உங்கள் வாழ்க்கையை ஏன் சுயசரிதையாக எழுத கூடாது?
நான் எழுத தயாராகத்தான் உள்ளேன். ஆனால் எந்த ஒரு பதிப்பகமும் என் சுயசரிதையை வெளியிட முன்வரவில்லை. ஒருவேளை யாராவது முன்வந்தால் நிச்சயம் நான் என் சுயசரிதையை எழுதுவேன்.
நன்றி! மீண்டுமொரு நல்லதொரு சந்திப்பில் சந்திக்கிறேன் என்று விடைபெற்றார் சஞ்சய் தத்.