டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் திலீப்புக்கு நான்காவது முறையாக ஜாமின் மனு மறுக்கப்பட்டு தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலையில், அவர் நடித்து கடந்த சில மாதங்களாக ரிலீசுக்கு காத்திருந்த 'ராம்லீலா' என்கிற படம் வரும் செப்-28-ல் ரிலீஸாக இருக்கிறது. இதையொட்டி சில தினங்களுக்கு முன் ராம்லீலா படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது.
சமீபத்தில் நடிகர் திலீப் சிறையில் இருந்து அனுமதிபெற்று தனது தந்தையின் நினைவு நாள் காரியங்களில் கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து அந்த போஸ்டர் டிசைன் செய்யப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களுக்கு திலீப்பின் மேல் இரக்கத்தை உருவாக்கி, அவர்களை தியேட்டர்களுக்கு வரவைப்பதற்காக செய்யப்பட்ட வியாபார தந்திரம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
ஒருவகையில் அது உண்மை தான் என்றாலும், படத்தின் இயக்குனர் அருண்கோபி அந்த போஸ்டர் குறித்து ஒரு ஆச்சர்யமான, அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது படத்தின் கதைப்படி, எம்.எல்.ஏவான திலீப், சில அரசியல் சூழ்ச்சிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுவாராம். பின் தான் நிரபராதி என நிரூபிக்க பல வகைகளில் முயற்சி செய்வாராம். இந்தசமயத்தில் கதைப்படி அவரது தந்தையின் நினைவு நாள் காரியங்களை செய்வதற்காக பரோலில் வந்து செல்வாராம்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் சமீபத்தில் வெளியான போஸ்டரில் இடம்பெற்றுள்ளனவாம். படத்தை வெளியிடும் நிறுவனம் இந்த விஷயத்தை தற்போதைய சூழலில் வியாபர, விளம்பர யுத்தியாக பயன்படுத்தினாலும், அதில் தவறென்ன இருக்கிறது என்கிறார் இயக்குனர்.
ஆனால் இந்தப்படத்திற்காக படமாக்கப்பட்ட காட்சிகள் இப்படி திலீப்பின் நிஜ வாழ்க்கையில் நிகழ்வுகளாக அமையும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஆச்சர்யம் விலகாமல் கூறுகிறார் இயக்குனர் அருண்கோபி.