தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆதித்யா சேனலில் பல காமெடி நிகழ்ச்சிகளை வழங்கி வருபவர் கதிர். சின்னத்திரையில் பெருவாரியான நேயர்களை கவர்ந்த எனக்கு சினிமாவிலும் பெரிய காமெடியனாகி ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன் என்கிறார் கதிர்.
இதுகுறித்து கதிர் மேலும் கூறுகையில், தற்போது ஆதித்யா சேனலில் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். அதன்காரணமாக பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோரை கவர்ந்துள்ளேன். குறிப்பாக எனது காமெடி நிகழ்ச்சிகளில் சிரிக்க வைப்பது மட்டுமின்றி சிந்திக்க வைப்பது போன்ற விசயங்களையும் வெளிப்படுத்தி வருகிறேன். சில சமயங்களில் சமூக கருத்துக்களையும் காமெடியில் கலந்து வருகிறேன்.
அதேபோல்தான் சினிமாவிலும் சிரிக்க வைப்பது மட்டுமின்றி அவ்வப்போது கருத்து சொல்லும் காமெடிகளையும் செய்ய ஆசைப்படுகிறேன். அதற்கான சந்தர்ப்பம் சூழல் தான் அமைய வேண்டும். அது டைரக்டர்களின் கையில் இருக்கிறது. தற்போது மதுரவீரன், விதிமதி, வீரா உள்பட பல படங்களில் நடிக்கிறேன்.
சில படங்களில் மற்ற காமெடியன்களுடன் இணைந்து நடித்தபோதும், ஓரிரு படங்களில் தனிக்காமெடியனாகவும் நடிக்கிறேன். முடிந்தவரை இந்த படங்கள் மூலம் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து விட வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அதேசமயம், சினிமாவில் பிசியாக விட்டதால் சின்னத்திரையை மறந்து விட மாட்டேன். என்னை ஒரு நடிகனாக வளர்த்து ஆளாக்கியது சின்னத்திரைதான். அதனால், எப்போதுமே சினிமா-சின்னத்திரை என இரட்டை குதிரையில் நான் சவாரி செய்வேன் என்கிறார் கதிர்.