தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூர்யா தயாரிப்பில், குற்றம் கடிதல் பிரம்மா இயக்கத்தில், ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன், நாசர் நடிப்பில், கடந்த வாரம் வெளியான படம் 'மகளிர் மட்டும்'. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த '36 வயதினிலே' படத்தைப் போலவே இந்த படமும் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறது. எனவே பெண்கள் மத்தியில் மட்டுமே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
'ஜோக்கர்' படத்தை இயக்கிய ராஜுமுருகன் 'மகளிர் மட்டும்' படத்தை பார்த்துவிட்டு, ''மகளிர் மட்டும்' படத்தை பார்த்தேன். நெடுநாட்களுக்குப் பிறகு கண்ணீரையும், புன்னகையையும் தந்த படம். நமது அம்மாக்களின், சகோதரிகளின், மனைவிகளின், காதலிகளின், தோழிகளின் அகத்தை அற்புதமாய் பேசுகிற படம். ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படைப்பு. தோழன் இயக்குனர் பிரம்மாவுக்கு முத்தங்கள். இப்படியான நல்ல படைப்பை தந்த தயாரிப்பாளர் சூர்யா, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியனுக்கும், படத்தில் பங்காற்றிய அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்'' என்று தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ராஜுமுருகனின் பாராட்டை மகளிர் மட்டும் விளம்பரத்துக்கு பயன்படுத்த உள்ளார்கள்.