தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு நான்காவது முறையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்தமுறை எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில், திலீப் நடிப்பில் உருவாகி, கடந்த சில மாதங்களாக ரிலீசாக காத்துக் கொண்டிருக்கும் அவரது 'ராம்லீலா' படத்தை வரும் செப்-28ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்தார்கள்.
முதலில் தியேட்டர் அதிபர்கள், திலீப் படத்தை ரிலீஸ் செய்வதற்கே மிகுந்த தயக்கம் காட்டியதாகவும், அவர்களை ஒருவாறு அவர்களை சமரசம் செய்தே 'ராம் லீலா'வை ரிலீஸ் பண்ண சம்மதம் வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் தோமிச்சன்.
தற்போது ஜாமீன் மனு நிரகாரிக்கப்பட்டுள்ள நிலையில், இனி ரிலீஸ் தேதியை மாற்ற தயாரிப்பாளர் விரும்பவில்லை. அதேசமயம் ரசிகர்கள் பலர் இப்போதும் திலீப் மீதான வெறுப்பில் இருந்தால் அவர்கள் மனதையும் கரைக்கும் விதமாக புதிய யுக்தியில் ராம்லீலா படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் திலீப் சிறையில் இருந்து அனுமதிபெற்று தனது தந்தையின் நினைவு நாள் காரியங்களில் கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து அந்த போஸ்டரை டிசைன் செய்துள்ளார்கள்.. இது ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சுமார் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிரயாகா மார்ட்டின் கதாநாயகியாக நடிக்க, திலீப்பின் அம்மாவாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ராதிகா சரத்குமார்.