ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மாதிரி சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் சாசனம் எழுதிக் கொடுத்தது போல போலீஸ் அதிகாரி கேரக்டர்களை குத்தகைக்கு எடுத்திருந்தவர் சுரேஷ்கோபி மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் நான்கு வருடத்திற்கு ஒருமுறை போலீஸ் கேரக்டரில் நடித்தால் இவர் வருடத்திற்கு நான்கு போலீஸ் படங்களில் நடித்தார்.
சினிமாவில் சுரேஷ்கோபி நுழைவதற்கு முன் அவரை போலீஸ் அதிகாரியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்பது தான் அவரது தந்தையின் விருப்பமாக இருந்தது. அதற்கான தேர்வுகளையும் சுரேஷ்கோபி எழுதினார். தந்தை சினிமா டிஸ்ட்ரிபியூட்டர் என்பதால் தனது செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் வேலையையும் அவர் எளிதாக வாங்கி தந்திருப்பார்.
ஆனால் சுரேஷ்கோபியின் நாட்டமெல்லாம் சினிமாவில் இருந்ததால், அவரது தந்தை, மகன் பற்றிய தனது ஆசையை மனதிற்குள் புதைத்துக்கொண்டார். ஆனாலும் அந்த போலீஸ் யூனிபார்ம் சுரேஷ் கோபியை விட்டபாடில்லை. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் குறையாத படங்களில் போலீஸ் அதிகாரியாக, மகன் நடித்ததை பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டார் அவரது தந்தை.