ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதிய தமிழ் திரைப்படங்களை இணையதளத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றி வரும் தமிழ்கன் என்ற இணையதளத்தில் நிர்வாகிகள் ஒருவரான கவுரி சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்கன் போன்ற சட்டவிரோத இணையதளங்களக்கு திரைத்துறையினரே உதவி வருகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவலை தயாரிப்பாளர் சங்க பொருளாளரும், பிரபல தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்கன் கவுரி சங்கங்கரை பல நாட்கள் திட்டமிட்டு ஆதாரத்துடன் பிடித்தோம். அதேபோன்று தமிழ் ராக்கர்ஸ் செயல்படும் இடத்தையும், யார் செயல்படுத்துகிறார்கள் என்பதையும் கண்டுபிடித்து விட்டோம். தக்க ஆதாரங்களுக்காக காத்திருக்கிறோம். ஆதாரம் கைக்கு வந்ததும். அவர்களும் கைது செய்யப்படுவார்கள்.
இதுபோன்ற சட்டவிரோத இணையதளங்களில் படங்களை பதிவேற்றம் செயற்வதற்கு திரைத்துறையில் பணியாற்றும் சில ஊழியர்கள் உதவி செய்கிறார்கள். சில ஆயிரம் ரூபாய் பணத்துக்காக அவர்கள் இந்த பெரிய தவறை செய்வதாக கேள்விப்படுகிறோம். அவர்களை கண்டுபிடித்து களையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். என்றார்.