டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
டைரக்டர் தரணியால் 'தில்' படத்தில் என்கவுன்டர் சங்கராக அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தான் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. 2000-ஆம் வருட ஆரம்பத்தில் இருந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவில் மிரட்டல் வில்லனாக வலம் வந்த இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தமிழில் வெளியான என்னை அறிந்தால், அநேகன் ஆகிய படங்களில் தலைகாட்டியதோடு சரி, அதன்பின் ஆளையே காணோம். விசாரித்து பார்த்ததில் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என மொழிக்கு ஒன்றாக சில படங்களில் நடித்துவரும் இவர் புதிதாக 'ஆவிட் மைனர்ஸ்' என்கிற நிகழ்ச்சியை நடத்த தயாராகி வருகிறார்.
“நான் என்னை எப்போதுமே பிரபலம் என நினைத்துக் கொண்டதில்லை. நான் ஒரு நடிகன். அந்த பெருமை மட்டுமே எனக்கு சொந்தம். படங்கள் இல்லாத நேரத்தில் சாலையில் இறங்கி மக்களோடு மக்களாக கலந்து அவர்களுடன் உரையாடுவது எனக்கு மிகவும் பிடித்தமான வேலை. அதைத்தான் தற்போது செய்து வருகிறேன். இவர்களிடமிருந்து பெற்ற அனுபவங்களை கொண்டுதான் இந்த 'ஆவிட் மைனர்ஸ்' என்கிற நிகழ்ச்சியை நடத்த உள்ளேன். இதன் நோக்கம் அனுபவங்களை பகிர்வதும் நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும் தான். இதில் கலந்து கொள்பவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள் தான்” என தனது புதிய களம் பற்றி விவரிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி.