டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்த்திரையுலகில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த பெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படங்களின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. அவற்றில் முக்கியமான படம் ரஜினி நடிக்கும் 'காலா'.
தனுஷின் 'வுண்டர் பார் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்திற்காக சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் மும்பை தாராவி ஏரியாவைப் போன்ற மிகப் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட்டில் ஏற்கெனவே பல காட்சிகளை படமாக்கிய இயக்குநர் பா.ரஞ்சித், வேலைநிறுத்தம் காரணமாக மும்பையில் படப்பிடிப்பை நடத்தினார்.
தற்போது ஸ்டிரைக் வாபஸ் ஆனதைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் தாராவி செட்டில் படப்பிடிப்பை துவக்கியுள்ளார். இன்றைய படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த செட்டில் காலா படப்பிடிப்பு தொடர்ந்து பல நாட்கள் நடைபெறவிருக்கிறது. இங்கே படப்பிடிப்பு நிறைவு பெற்றதும் இறுதிகட்ட படப்பிடிப்பை மும்பையில் நடத்த பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளார் என காலா படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.