தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் நான்கு படங்கள் வெளியாகின. நான்குமே முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தான். அதில் பிரபல இயக்குனர் லால் ஜோஸ் இயக்கி, மோகன்லால் நடித்துள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்', மம்முட்டி நடிப்பில் 'புள்ளிக்காரன் ஸ்டாரா', பிருத்விராஜ், பாவனா இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'ஆடம் ஜான்' மற்றும் 'பிரேமம்' கூட்டணியில் நிவின்பாலி நடிப்பில் உருவான 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' ஆகிய நான்கு படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் வெளியாகின.
ஆனால் பிளாக் பஸ்டர் என்றோ, சூப்பர் ஹிட் என்றோ, அவ்வளவு ஏன் ஹிட் என்றோ சொல்லும் அளவுக்கு கூட எந்தப்படமும் அமையவில்லை. இதில் மோகன்லாலின் வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் ஏமாற்றம் தந்தாலும் கடந்த பத்து நாட்களில் வசூல் ரீதியாக சுமார் 15 கோடிகளை தாண்டி முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக நிவின்பாலியின் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படம் 11.௦7 கோடி, மம்முட்டியின் 'புள்ளிக்காரன் ஸ்டாரா' படம் 10.54 கோடியும் பிருத்விராஜின் ஆடம் ஜான் 9.64 கோடியும் வசூலித்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இதில் விமர்சனம் மற்றும் வரவேற்பு ரீதியாக நிவின்பாலியின் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படம் முதல் இடத்தில் இருக்கிறது.