ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் நான்கு படங்கள் வெளியாகின. நான்குமே முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தான். அதில் பிரபல இயக்குனர் லால் ஜோஸ் இயக்கி, மோகன்லால் நடித்துள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்', மம்முட்டி நடிப்பில் 'புள்ளிக்காரன் ஸ்டாரா', பிருத்விராஜ், பாவனா இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'ஆடம் ஜான்' மற்றும் 'பிரேமம்' கூட்டணியில் நிவின்பாலி நடிப்பில் உருவான 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' ஆகிய நான்கு படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் வெளியாகின.
ஆனால் பிளாக் பஸ்டர் என்றோ, சூப்பர் ஹிட் என்றோ, அவ்வளவு ஏன் ஹிட் என்றோ சொல்லும் அளவுக்கு கூட எந்தப்படமும் அமையவில்லை. இதில் மோகன்லாலின் வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் ஏமாற்றம் தந்தாலும் கடந்த பத்து நாட்களில் வசூல் ரீதியாக சுமார் 15 கோடிகளை தாண்டி முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக நிவின்பாலியின் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படம் 11.௦7 கோடி, மம்முட்டியின் 'புள்ளிக்காரன் ஸ்டாரா' படம் 10.54 கோடியும் பிருத்விராஜின் ஆடம் ஜான் 9.64 கோடியும் வசூலித்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இதில் விமர்சனம் மற்றும் வரவேற்பு ரீதியாக நிவின்பாலியின் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படம் முதல் இடத்தில் இருக்கிறது.