பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் 2010ல் பிருத்விராஜுடன் நடித்த 'அன்வர்' படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இடைவெளி விட்டு 'அச்சயன்ஸ்' என்கிற படத்தில் ஜெயராமுடன் சேர்ந்து நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், அடுத்ததாக மோகன்லாலுடன் 'ஒடியன்' என்கிற படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பிரகாஷ்ராஜை தேடிவந்தது.
விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். பிளாக் மேஜிக்கை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
ஏற்கனவே கோழிக்கோட்டிலும், வாரணாசியிலும் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பாலக்காட்டில் அடுத்தகட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளார்கள். இதில் கலந்து கொண்டு நடித்து வரும் பிரகாஷ்ராஜ், 20 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில், தமிழில் 'இருவர்' படத்தில் மோகன் லாலுடன் நடித்ததை தொடர்ந்து, தற்போது மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.