இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திரைப்படங்களில் தான் ஆபாசம் என்றால் இப்போது சின்னத்திரையிலும் தொடர ஆரம்பித்துவிட்டது. சோனி தொலைக்காட்சியில் பெஹ்ரிதார் பியா கி என்ற தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து ஒளிபரப்பாக தொடங்கியது. இது ஒரு ஜமீன் குடும்பத்து கதை. ஆரம்பத்தில் நன்றாக கலகலப்பாகத்தான் போய்கொண்டிருந்து. ஆனால் கடந்த சில வாரங்களாக கதை வில்லங்கமானது.
ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு, இன்னொரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு காதல் வருகிறது. சிறுவன் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக பெண் குடும்பத்து ஜமீன், காதலுக்கு உதவி செய்கிறது. ஒரு கட்டத்தில் ரகசியமாக திருமணமும் செய்து வைத்து விடுகிறது. இருவரும் இணைந்து குடும்பம் நடத்தவும் ஆரம்பிக்கிறார்கள். இப்படிப் போனது கதை.
இந்த கதை பற்றி பேஸ்புக், டுவிட்டரில் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து கிழித்து தொங்கவிட்டார்கள். உஷாரான சேனல் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பியது. அதன் பிறகும் எதிர்ப்பு கடுமையானது. சில தன்னார்வ அமைப்புகள் வழக்கு போட்டு சீரியலை நிறுத்த முடிவு செய்தது. இதனால் சேனல் தற்போது தொடர் ஒளிபரப்பை நிறுத்திவிட்டது. இதன் மூலம் சின்னத்திரை சீரியல்களுக்கும் தணிக்கை வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.