ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த 2016ஆம் வருடத்திற்கான கேரளா அரசின் திரைப்பட விருதுகள் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. நேற்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மோகன்லால், மம்முட்டி உட்பட இன்றைய இளம் முன்னணி நடிகர்கள் வரை எவரும் கலந்து கொள்ளாதது முதல்வருக்கு வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அது விழாவில் அவர் பேசிய பேச்சிலும் வெளிப்பட்டது..
“இந்த விழாவிற்கு முறைப்படி, சம்பிரதாயப்படி அழைப்பு அனுப்பவில்லை என பலரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லையா, அல்லது கலந்து கொள்ள விருப்பம் இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. இது உங்களுக்கான விழா, இதில் நீங்களே கலந்து கொள்ளாமல் புறக்கணித்தால் எப்படி..?” என தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் முதல்வர் பினராயி விஜயன்.
இந்த விழாவில் கம்மட்டிப்பாடம் படத்தில் நடித்த விநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், அனுராக கரிக்கின் வெள்ளம் படத்தில் நடித்த ரெஜிஷா விஜயனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
விழாவில் ஷோபனா, ரீமா கல்லிங்கல் ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.