இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
பாலிவுட்டின் மாஜி கனவுக்கன்னி மாதுரி தீட்சித். திருமணம், குழந்தை பிறப்பு என்று ஆன பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டவர் கடைசியாக 2014-ம் ஆண்டு வெளியான குலாப் கேங் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர்.
இந்நிலையில் இப்போது சினிமாவில் தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். ஆர்என்எம் என்ற தனது சொந்த தயாரிப்பு மூலமாக இப்படத்தை தயாரிக்கிறார். இந்த நிறுவனம் இதற்கு முன்னர் மருத்துவம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறது. இப்போது முதன்முறையாக சினிமாவில் களமிறங்குகிறது.
முதற்கட்டமாக மராத்தியில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்த படமாக உருவாகும் இப்படத்தின் கதையை யோகேஷ் விநாயக் ஜோஷி எழுத, ஸ்வப்னாநீல் ஜெயாகர் இயக்குகிறார். நடிகர்கள் உள்ளிட்ட மற்ற தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
படம் தயாரிப்பது குறித்து மாதுரி தீட்சித் கூறியிருப்பதாவது.... "எங்களது ஆர்என்எம்-ன் தயாரிப்பு மூலம் புதிய தளத்தில் அடியெடுத்து வைக்க உள்ளோம். இது குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்த படமாக இருக்கும். ஷூட்டிங் நாளை எண்ணி ஆவலுடன் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.