‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நிபுணன் படத்தோடு 150 படங்களில் நடித்து விட்டார் அர்ஜூன். ஏற்கனவே பல படங்களை இயக்கி நடித்த அவர், தற்போது தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூனை வைத்து சொல்லிவிடவா என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். என்னதான் தான் ஆக்சன் ஹீரோ என்றாலும், இந்த படத்தில் ஆக்சனை திணிக்காமல் காதல் கதையை படமாக்கியிருக்கிறார் அர்ஜூன். மேலும், அவர் தனது மகளை சினிமாவில் நடிக்க வைப்பதற்கு அர்ஜூனின் அபிமானிகள் சிலர் ஆட்சேபனை தெரிவித்தார்களாம்.
அப்போது அர்ஜூன் பதிலளிக்கையில், நான் இவ்வளவு பெரிய புகழடைந்திருப்பதற்கு முழு காரணம் சினிமா தான். சினிமாவில் தான் எல்லாம் சம்பாதித்தேன். சினிமா போட்ட சாப்பாடைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது என் தொழிலை நானே தவறாக நினைக்கக்கூடாது. அதோடு, என் மகளைப்போன்ற எத்தனையோ பெண்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், என் மகளை சினிமாவில் நடிகையாக்கியதை நான் பெருமையாகவே கருதுகிறேன்.
சினிமா ரொம்ப பாதுகாப்பான தொழில் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் என் மகள் நடிக்க வேண்டும் என்று சொன்னதும், விஷாலின் பட்டத்து யானை படத்தில் அறிமுகம் செய்தேன் என்று சினிமாவைப்பற்றி அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார் அர்ஜூன்.