டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கின்னஸ் சாதனை படைத்த தேசிய விருது நடிகர் பக்ரு. தமிழில் டிஷ்யூம், அதிசய தீவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு உப்பு புளி காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். குருராஜா இண்டர் நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் டினிடாம் ஹீரோவாகவும், வங்காள நடிகை பவுலமி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். வேதம் புதிது ரபி தேவேந்திரன் இசை அமைக்கிறார், ரமேஷன் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றிய இயக்குனர் குருராஜா கூறியதாவது:
வேதாளம், விக்ரமாத்தியன் கதையின் அடிப்படையில் உருவாகும் படம். வேதாளம் கதை சொல்லி கேள்வி கேட்பதும், அதற்கு விக்ரமாதித்தன் பதில் சொல்வது மாதிரியான கதை. வேதாளம் சொல்லும் கதை இந்தக் காலத்தில் நடக்கிற கதை. அதில்தான் நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். வேதாளமாக மலையாள காமெடி நடிகர் பக்ரு நடிக்கிறார் என்றார்.