கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சமீபத்தில் வெளியான அக்ஷய் குமாரின் டாய்லெட் ஏக் பிரேம் கதா ரூ.100 கோடி வசூலை எட்டி, வெற்றி படமாக ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடந்தது. இதில் லண்டனில் இருந்து ஸ்கைப் மூலம் அக்ஷய் குமார் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அக்ஷய் குமார், சமூக ஹீரோ என்ற முத்திரை தனக்கு வேண்டாம் எனவும், அதற்காக சமூக நலன் தொடர்பான படங்களில் நடிக்கவில்லை எனவும் கூறி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், எனக்கு அந்த படம் பிடித்திருந்தால், அதில் நடிப்பேன். ரோபட் 2.0 வில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளேன். அதே போன்று கோல்ட் என்ற விளையாட்ட சார்ந்த படத்தில் நடித்துள்ளேன். அவைகள் முற்றிலும் வேறுபட்டவை.
நான் சமூக நலம் சார்ந்த படங்களில் மட்டும் நடிக்கவில்லை. அதனால் தயவு செய்து இது போன்ற முத்திரைகளை என் மீது குத்தாதீர்கள் என்றார். அக்ஷய் குமார் தற்போது நடித்து வரும் ரோபட் 2.0 படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ம் தேதி ரிலீசாக உள்ளது.