பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தற்போது ஒரே நேரத்தில் இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம், வேலைக்காரன் என பல படங்களில் நடிக்கும் நயன்தாரா, இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அதனால் அவரது கால்சீட் டைரி நிரம்பி வழிகிறது. இதில், அதர்வாவுடன் இணைந்து நயன்தாரா நடித் துள்ள இமைக்கா நொடிகள் படப்பிடிப்பு எப்போதோ முடிய வேண்டியது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை என்கிறார்கள்.
இதற்கு காரணம் நயன்தாராதானாம். காரணம், இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு அவர் லீடு ரோலில் நடிக்க கமிட்டான அறம், கொலை யுதிர்காலம் ஆகிய படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்த நயன்தாரா, அதையடுத்து வேலைக்காரன் படத்திற்கும் கால்சீட் கொடுத்து விட்டாராம். இதனால் இமைக்கா நொடிகளில் நயன்தாரா சம்பந்தப்பட்ட நிறைய காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம்.
அந்தவகையில், இன்னும் 15 நாட்களுக்கு நயன்தாரா இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தால்தான் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்க முடியுமாம். அதனால் நயன்தாராவின் கால்சீட்டுக் காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.