பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
கைதி நம்பர் 150 படத்தின் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி, உய்யலவாடா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்க உள்ளார். இது சுதந்திர போராட்ட வீரரின் கதை. இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.
இன்னொரு முக்கியமான கேரக்டரில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவியே அவரிடம் நேரடியாக படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவர் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிறார்கள். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகி வருகிறது. தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.