நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் |
கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு சித்தரவதைக்கு ஆளான சம்பவத்திற்குப்பின் மலையாள நடிகைகள் உள்ளிட்ட சினிமாவில் மற்ற துறையில் இருக்கும் சில பெண்கள் அனைவரும் சேர்ந்து, தங்களது பாதுகாப்பிற்காக, பெண்கள் நல அமைப்பு என்கிற ஒன்றை துவங்கினார்கள்.. இதில் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியர் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்படிஎன்றால் நடிகர் சங்கம் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா என்கிற ரீதியில் சில நடிகைகள் மீது மலையாள நடிகர் சங்கம் கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது..
தற்போது திலீப் விவகாரம் சங்கத்திற்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியரும் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல நடந்துகொள்வதால் அவர் மீது நடிகர்சங்கம் மறைமுகமாக தடை விதித்துள்ளதாகவும் சொலப்பட்டது. அதன் காரணமாகவே மோகன்லாலுடன் அவர் அடுத்ததாக நடிக்க உள்ள 'ஒடியன்' என்கிற படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது..
இந்தநிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, மஞ்சு வாரியரின் நண்பரும், ஒடியன் பட இயக்குனருமான ஸ்ரீகுமார் மேனன், “மஞ்சு வாரியார் நீக்கப்படவில்லை.. அவர்தான் கதாநாயகியாக நடிக்கிறார்.. உங்களது சந்தேகமெல்லாம் தீர்ந்ததா..?” என பதில்கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.