ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு சித்தரவதைக்கு ஆளான சம்பவத்திற்குப்பின் மலையாள நடிகைகள் உள்ளிட்ட சினிமாவில் மற்ற துறையில் இருக்கும் சில பெண்கள் அனைவரும் சேர்ந்து, தங்களது பாதுகாப்பிற்காக, பெண்கள் நல அமைப்பு என்கிற ஒன்றை துவங்கினார்கள்.. இதில் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியர் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்படிஎன்றால் நடிகர் சங்கம் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா என்கிற ரீதியில் சில நடிகைகள் மீது மலையாள நடிகர் சங்கம் கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது..
தற்போது திலீப் விவகாரம் சங்கத்திற்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியரும் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல நடந்துகொள்வதால் அவர் மீது நடிகர்சங்கம் மறைமுகமாக தடை விதித்துள்ளதாகவும் சொலப்பட்டது. அதன் காரணமாகவே மோகன்லாலுடன் அவர் அடுத்ததாக நடிக்க உள்ள 'ஒடியன்' என்கிற படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது..
இந்தநிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, மஞ்சு வாரியரின் நண்பரும், ஒடியன் பட இயக்குனருமான ஸ்ரீகுமார் மேனன், “மஞ்சு வாரியார் நீக்கப்படவில்லை.. அவர்தான் கதாநாயகியாக நடிக்கிறார்.. உங்களது சந்தேகமெல்லாம் தீர்ந்ததா..?” என பதில்கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.