டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கல்லீரல் நோயால் அவதிப்பட்டு, மரணத்தை தழுவிய அல்வா வாசுவின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு அஞ்சலி செலுத்த திரையுலகம் முன்வராதது சோகமான விஷயம்.
மதுரையை சேர்ந்த வாசு, மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றி, வாழ்க்கை சக்கரம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் அமைதிப்படை படம் அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து வடிவேலு உடன் ஏராளமான படங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்தவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், கல்லீரல் செயல்பாடு முழுமையாக செயல் இழந்ததால் நேற்று(ஆக., 17) மரணத்தை தழுவினார். மதுரை முனிச்சாலை பகுதியில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது குடும்பத்தார் உள்ளிட்ட சில நபர்களை தவிர சினிமா பிரபலங்கள் யாரும் அஞ்சலி செலுத்தவில்லை.
நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விக்னேஷ் மட்டும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இவர் தவிர நடிகர் அபி சரவணன் உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நடிகர்கள் மட்டும் அஞ்சலி செலுத்தினர். வாசுவுடன் பல படங்களில் நடித்த மதுரையை சேர்ந்தவருமான வடிவேலு கூட எட்டிப்பார்க்காதது தான் இன்னும் சோகமானது.
சுமார் 900 படங்களில் நடித்துள்ள வாசு, சின்ன நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை பலரது படங்களில் நடித்துள்ளார். அப்படிப்பட்டவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தாதது அவரது குடும்பத்தாரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்த வாசுவிற்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ணன் ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர். வாசுவின் உடல் மதுரை, தத்தநேரியில் உள்ள மின்மாயனத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.