மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெறி படத்திற்கு பிறகு விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருடன் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாக தயாராகி வருகிறது.
வருகிற 20ம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மெர்சல் படத்தின் இசை பிரமாண்டமாக வெளியாக உள்ளது. முன்னதாக மெர்சல் படத்தில் ஆளப்போறான், நீதானே பாடல்கள் வெளியாகி ரசிகர்களை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த இரண்டு பாடல்களும் டுவிட்டரில் டிரெண்ட்டிங்கில் இருந்தன.
இந்நிலையில் டுவிட்டர் இந்தியா, மெர்சல் விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய எமோஜியை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பொம்மையை தான் எமோஜி என்கிறார்கள். எந்த ஒரு தென்னிந்திய நடிகரின் படத்திற்கும் கிடைக்காத அங்கீகாரம் விஜய் படத்திற்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் டுவிட்டரில் எமோஜி பெறும் முதல் தென்னிந்திய படம் என்ற பெருமையை விஜய்யின் மெர்சல் பெற்றுள்ளது.