அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் |
ஹீரோபன்டி, தில்வாலே, ராப்தா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை கிர்த்தி சனோன். இவரது நடிப்பில் இன்று(ஆகஸ்ட் 18) வெளியாகியுள்ள படம் பரேலி கி பார்பி. இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருந்த கிர்த்தி, நமக்கு அளித்த சிறப்பு பேட்டி...
பரேலி கி பார்பி பட வாய்ப்பு எப்படி வந்தது?
தங்கல் மற்றும் நில் பட்டே சனாட்டா படங்கள் ரிலீஸாவதற்கு முன்பாக பரேலி படத்தின் கதையை நிதேஷ் திவாரி என்னிடம் தெளிவாக கூறினார். 10 - 15 நிமிடங்களிலேயே கதை பிடித்து போக உடனே சம்மதம் சொல்லிவிட்டேன். இந்த பட வாய்ப்பு வந்த போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அதை சொல்ல வார்த்தைகள் இல்லை. இப்போது படமும் ரிலீஸாகிவிட்டது, இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கிளாமர் இல்லாமல் நடித்தது பற்றி?
கிளாமர் அல்லது கிளாமராக இல்லாமல் நடிப்பது பற்றி நான் கவலைப்படுவது கிடையாது. ஒரு நடிகைக்கு படத்தில் ஆடையும், மேக்-அப்பும் தான் அவரை கிளாமராக காண்பிக்கிறது. நிஜ வாழ்க்கையில் நான் அதிகமாக மேக்-அப் போடுவது கிடையாது. சொல்லப்போனால் இந்தப்படத்தில் சாதாரண உடையணிந்து நடித்தது, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோக்கள் ஆயுஸ்மான் குராணா, ராஜ்குமார் ராவ்வை விட நான் சீக்கிரம் ரெடியாக உதவியது. அதோடு இப்படி நடித்திருப்பது பிடித்திருக்கிறது.
வட மொழி எப்படி சரளமாக பேசுகிறீர்கள்.?
நான் டில்லியை சேர்ந்தவர் என்பதால் நன்றாகவே ஹிந்தி பேசுவேன். இந்தப்படத்தில் நான் முழுமையாக வட மொழியை பேசவில்லை. உடன் நடித்த ரோகித் சவுத்ரி தான் எனக்கு நிறைய இடங்களில் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். அதுமட்டுமல்ல நானும் லக்னோ எல்லாம் சென்று அங்குள்ள பெண்கள் எப்படி பேசுகிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொண்டு பயிற்சி எடுத்து, என்னால் முடிந்தவரை பேசியிருக்கிறேன்.
தென்னிந்திய படங்களில் நடித்து விட்டு திடீரென பாலிவுட்டில் என்ட்ரியானது ஏன்?
தனிப்பட்ட காரணம் எதுவும் கிடையாது. என்னுடைய முதல்படம் தெலுங்கில் நென்னோகாடினே. சில நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில் படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் தள்ளிப்போனது. அந்தசமயத்தில் தான் பாலிவுட்டிலிருந்து ஹீரோபன்டி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. 2014, ஜன.,யில் தெலுங்கு படமும், அதே ஆண்டு மே மாதம் பாலிவுட் படமும் ரிலீஸானது. ஆகையால் நான் தெலுங்கு சினிமாவை விட பாலிவுட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தேன் என்று சொல்லிவிட முடியாது. நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை பயன்படுத்தி கொள்கிறேன், அவ்வளவுதான்.
ராப்தா தோல்வியை எப்படி எடுத்து கொண்டீர்கள்?
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ராப்தா தோல்வி மனதளவில் என்னை ரொம்பவே பாதித்தது. காரணம், இந்தப்படத்திற்காக நிறைய சிரமப்பட்டு உழைத்தேன். அப்படி உழைத்த படம் தோல்வி அடையும் போது வருத்தம் இருக்கத்தானே செய்யும். அதேசமயம் தோல்வி இருந்தாலும் இந்தப்படத்தில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். குறிப்பாக முன்பை விட நடிப்பில் இன்னும் தேர்ச்சி பெற்றுள்ளேன்.