'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
‛பிக்பாஸிலிருந்து வெளியே வந்த நடிகை ஓவியா, என் காதல் உண்மையானது; என்னை யாரும் ரோல் மாடலாக பின்பற்ற வேண்டாம்' என, மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து ஓவியா நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது:
பிக்பாஸிலிருந்து வெளியே வந்ததும், சுற்றுலா சென்று விட்டேன். இப்போது தான் பிக்பாஸ் தொடர்பான வீடியோக்களை பார்த்தேன். எனக்கு இவ்வளவு வரவேற்பு இருந்ததை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி. எனக்கு மனதளவில் சற்று பிரச்சனை இருந்தது. அனைத்தும் சரியாகி விட்டது. பிக்பாஸிலிருந்து ஜூலி, சக்தி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். அப்படி செய்து எனக்கு சாபத்தை ஏற்படுத்தி விடாதீர்கள். தவறு செய்யாத மனிதன் எங்கு இருக்கிறான். அரசே தவறு செய்யும் போது, நாமெல்லாம் எப்படி. மற்றவர்களை வேதனைப்படுத்தும் ரசிகர்கள் எனக்கு வேண்டவே வேண்டாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இனி போக மாட்டேன். தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். எனக்காக யாரும் படத்தை பார்க்க வேண்டாம். கதை பிடித்திருந்தால் பாருங்கள்; பிடிக்கவில்லை என்றால் கேவலமாக கூட திட்டலாம்.
என் காதல் உண்மையானது. அதை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. என் தலை முடியை வெட்டியதை பார்த்து பலர் சிகிச்சை ஏதும் எடுத்தீர்களா என கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. ‛விக்' தயாரிப்பு நிறுவனம் ஒன்று என்னை அணுகி, புற்றுநோயாளிகளுக்காக ‛விக்' தயாரிக்கிறோம். தலைமுடி தானம் கேட்டார்கள். தலைமுடி போனால் எல்லாம் போய்விடாது. தலைமுடியில் ஒன்றுமே இல்லை. அதை உணர்த்தவே என் முடியை வெட்டி விட்டேன். பலர் என்னை முன்மாதிரியாக எடுத்துள்ளதாக கூறுகின்றனர். அப்படியெல்லாம் செய்யாதீர்கள் அந்தளவுக்கு தகுதியான நபர் நான் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.