பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' வெற்றிப்படத்தை தொடர்ந்து 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்குகிறார் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கிற இந்த படத்தில் அரவிந்த்சாமி, 'மாநகரம்' புகழ் சந்தீப், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா முதலானோர் நடிக்கிறார்கள். 'துருவங்கள் பதினாறு' திரைப்படம் போல் இந்த படமும் க்ரைம் த்ரில்லர் படம்!
நயன்தாரா நடித்த 'மாயா' படத்திற்கு இசை அமைத்த ரான் யோஹான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். நரகாசுரன் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து நேற்று முதல் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. நரகாசூரனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.