டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வீராசாமி படத்திற்கு பிறகு சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த டி.ராஜேந்தர், ஆர்யா சூர்யா, விழித்திரு படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். பின்னர் கவண் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். அதற்கு முன்பே ஒருதலைக்காதல் என்ற படத்தை தயாரித்து இயக்கி வந்த டி.ஆர்., சில நாட்களாக கொல்லிமலை பகுதியில் படப்பிடிப்பு நடத்தியவர் பின்னர் கிடப்பில் போட்டு விட்டார்.
தற்போது ஒருதலைக்காதல் படத்திற்கு மட்டும் பத்து பாடல்களுக்கு மேல் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறாராம். அதோடு, தனக்கு அவ்வப்போது ஏதேனும் நல்ல டியூன்களை தோன்றினால் உடனடியாக அதை கம்போஸிங் செய்து அவற்றையும் ரெக்கார்ட்டிங் செய்து விடுகிறாராம். அந்த வகையில், தற்போது 32 பாடல்களை பதிவு செய்து வைத்திருக்கிறாராம் டி.ஆர்., அந்த பாடல்களை எதிர்காலத்தில் தான் இயக்கும் படங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறாராம் அவர்.