அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள நடிகர் திலீப் நடிகை விவகாரத்தில் சிக்கி சிறைக்கு சென்றாலும் சென்றார், மற்ற சில பிரபலங்களின் பிரச்சனைகளுடன் அவரை தொடர்புபடுத்தி தினமும் ஏதாவது ஒரு பகீர் செய்தி வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அந்த பட்டியலில் இப்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனையும் கோர்த்துவிட்டுள்ளார்கள் சோஷியல் மீடியாவாசிகள். திலீப்புக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் என்னய்யா சம்பந்தம் என நீங்கள் கேட்பது புரிகிறது.. மலையாளத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்த முதல் படமான 'சக்கர முத்து' படத்தில் திலீப் தான் ஹீரோவாக நடித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
இப்போது கிளம்பியுள்ள சர்ச்சை என்னவென்றால், சில வருடங்களுக்கு முன் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் திலீப் நடித்த 'கொல்கத்தா நியூஸ்' படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதாக இருந்ததது. ஆனால் சில காரணங்களால் அந்தப்படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அப்படி நீக்கப்பட்டதன் பின்னணியில் திலீப் தான் காரணம் என லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்னதாக இப்போது புதிய பூதத்தை கிளப்பி விட்டுள்ளார்கள். இதனைக்கண்டு கொதித்துப்போன லட்சுமி ராமகிருஷ்ணன், அந்தமாதிரி நிகழ்வு எதுவும் நடக்கவில்லை எனவும் திலீப்பை பற்றி அப்படி எதுவும் தான் கூறவில்லை எனவும் காட்டமாக கூறியுள்ளார்.
மேலும் நடந்தது பற்றி அவர் கூறுகையில், “நான் ஒரு பேட்டியின்போது, கொல்கத்தா நியூஸ் படத்தில் இருந்து என்னை ராசியில்லாத நடிகை என நீக்கிவிட்டார்கள். ஆனால் இதோ இப்போது என்னுடைய ராசி, நல்ல ராசிதான் என நிரூபணமாகவில்லையா என கூறியிருந்தேன். இதைப்படித்துவிட்டு திலீப் கூட எனக்கு போன் செய்து, சேச்சி உங்களை 'கொல்கத்தா நியூஸ்' படத்தில் இருந்து நீக்கியதற்கு நான் காரணமில்லை என்று கூறினார். ஆக, அந்த விஷயம் அப்போதே முடிந்துவிட்டது.
இப்போது தேவையில்லாமல், நான் சொல்லாததை சொன்னதாக திரித்து கூறுவது தவறு. நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு ஆளான ஒருவர் பற்றி தேவையில்லாமல் பேசுவது தவறு என்கிற அடிப்படை அறிவு கூடவா எனக்கு இருக்காது. திலீப்பை பொறுத்தவரை அவருடன் நான் நடிக்கும்போது மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். அவ்வளவுதான்” என விளக்கமளித்துள்ளாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.