'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவையும், பாடல்களையும் பிரிக்கவே முடியாது. வேறு எந்த மொழியிலாவது இந்த அளவிற்கு வித்தியாசமான பாடல்களின் படைப்புகள் வந்திருக்குமா என்பது ஆச்சரியம்தான். எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து இன்று வரை தமிழ்த் திரையிசை என்பது தனித்து இயங்கி வருகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இசையமைப்பாளர்களில் தமிழ்த் திரையிசை புது வடிவம் பெற்றுக் கொண்டே வந்திருக்கிறது. இளையராஜாவின் இனிமையான இசையில் மூழ்கிப் போயிருந்த ரசிகர்களுக்கு ஒரு புதிய இசைப் புயலாய் 'ரோஜா' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான்.
1992ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான 'ரோஜா' படம் தமிழில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்து. அதுவரை கேட்டிருக்காத இசையும், அழகான வரிகளும் ரசிகர்களை சிறகடித்து பறக்க வைத்தது.
'சின்னச் சின்ன ஆசை'யாக ஆரம்பித்த ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பயணம் இன்று பல மொழிகள், பல நாடுகள் கடந்து உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 'மொசார்ட் ஆப் சென்னை' என அவரை உலகப் புகழ் பெற வைத்ததோடு மட்டுமல்லாமல் ஆஸ்கர் நாயகன் என்று கொண்டாடும் அளவிற்கு ஆஸ்கர் விருதையும் பெற்று வர வைத்தது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், மான்ட்ரீன் என அவரது இசை எல்லைகள் விரிவடைந்தன. ஒவ்வொரு வருடமும் குறைவான படங்களுக்கு இசையமைத்தாலும் அனைத்துமே இசையால் நிறைவான படங்களாக இருக்கின்றன. புதுப் புதுக் கவிஞர்கள், புதுப் புது பாடகர்கள், பாடகிகள் என திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார்.
'ரோஜா' முதல் 'மெர்சல்' வரை அவருடைய இசைப் பயணம் பல தடங்களைத் திரையுலகில் பதித்துள்ளது. ஆனால், ஒரே ஒரு குறை, பெரிய இயக்குனர்கள், பெரிய ஹீரோக்கள் ஆகியோரின் படங்களுக்கு மட்டுமே தமிழில் அதிகம் இசையமைத்துள்ளார். சிறிய படங்களாக இருந்தாலும் சிறந்த படங்களுக்கு இசையமைத்தால் அவருடைய இசையால் இன்னும் பல திறமைசாலிகள் இந்தத் திரையுலகத்திற்கு அடையாளம் காட்டப்படுவார்கள்.
இருபத்தைந்து வருடங்களில் செய்யாத இந்த ஒன்றை இனியாவது அவர் செய்தால் வளரத் துடிக்கும் பல இளம் இயக்குனர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.