பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
அரசியல் பிரவேசத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடித்த படம் கைதி எண் 150. அதையடுத்து பல கதைகளை கேட்டு வந்த அவர், ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் கதையை தற்போது ஓகே பண்ணி வைத்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.
அதனால் படத்தில் இந்திய அளவில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகர்- நடிகைகள் இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்கிறார் சிரஞ்சீவி. மேலும், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, நான் ஈ சுதீப் வில்லனாக நடிக்கிறாராம்.
மேலும், இந்த படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில், சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ந்தேதி அன்று படத்தின் தலைப்புடன் கூடிய லோகோ வெளியாக இருப்பதாக படத்தின் டைரக்டர் சுரேந்தர் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரண் தயாரிக்கிறார்.