நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
மலையாளத்தில் முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் பிரபல முன்னணி நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் முக்கியமானர் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட பல்சர் சுனில். இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திலீப் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கிய வழக்கில் பல்சர் சுனிலை நேற்று திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த பல்சர் சுனில் அங்கு நின்று கொண்டிருந்த நிருபர்களை நோக்கி "கடத்தல் வழக்கில் மேடத்திற்கும் தொடர்பு உண்டு என்று நான் கூறியது பொய்யல்ல. போலீஸ் விசாரணையில் அது தெரியும். அப்படி போலீசார் கண்டுபிடிக்காவிட்டால் நானே அவர் பெயரை அடுத்த முறை கோர்ட்டுக்கு வரும்போது சொல்வேன். அவர் ஒரு பிரபலமான நடிகை என்பதை மட்டும் இப்போது சொல்கிறேன்" என்று சத்தமாக கூறியபடியே சென்றான்.