பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
வாக்களித்த வாக்காளர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் போல, கடந்த ஒரு வாரத்தில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக வாக்களித்த ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் 'பிக் பாஸ்'. கடந்த திங்கள் கிழமையன்று இந்த வாரத்திற்கான எவிக்ஷனுக்காக ரைசா தவிர மற்ற அனைவரும் தேர்வானார்கள். அடுத்து வையாபுரி, சினேகன் ஆகிய இருவரில் யாரையாவது ஒருவரைக் காப்பாற்றலாம் என போட்டியாளர்களிடம் பிக் பாஸ் சொன்னதில் மற்றவர்கள் சேர்ந்து வையாபுரியைக் காப்பாற்றினார்கள். அதற்குப் பிறகு நாமினேஷனில் பிந்து மாதவி, கணேஷ், சினேகன், சக்தி, ஆரவ், காயத்ரி உள்ளிட்ட 6 பேர் இருந்தார்கள்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை திடீரென போட்டியாளர்களிடம் ஐந்து கேள்விகள் கேட்டதில் சரியான பதில்களைச் சொன்னதாக காயத்ரியைக் காப்பாற்றினார் பிக் பாஸ். அதனால், காயத்ரியை இந்த வாரம் வெளியேற்ற வாக்களித்த பலரும் கோபமடைந்து சமூக வலைத்தளங்களில் பிக் பாஸின் இந்த திடீர் காயத்ரி பாசத்திற்கு அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தார்கள்.
நேற்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசனின் முன்னாள் கதாநாயகி ஸ்ரீப்ரியா, காமெடி நடிகர் சதீஷ் இருவரும் கலந்து கொண்டு சில கேள்விகளை, சந்தேகங்களைக் கேட்டனர். அப்போது காயத்ரி காப்பாற்றப்பட்டதை கண்டித்து ஸ்ரீப்ரியா கேள்வி கேட்டார். அதை முன்னரே சொல்லியிருக்க வேண்டும் என்றார். அவரின் கேள்விக்கு பதிலளித்த 'பிக் பாஸ்', இது 'இன்டர்நேஷனல் ஃபார்மேட்', யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் காப்பாற்றப்படுவார்கள், எலிமினேட் ஆனவர்களும் மீண்டும் உள்ளே வரலாம், புதிதாக யார் வேண்டுமானாலும் உள்ளே போகலாம் என்று சொன்னார்.
ஆனால், பிக் பாஸின் இந்த பதில் ரசிகர்களுக்குத் திருப்தியளிப்பதாக இல்லை. இந்த வாரம் காயத்ரி, சக்தி இருவரில் ஒருவர்தான் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறுவார்கள் என்று நினைத்திருந்த நிலையில் காயத்ரியை வேண்டுமென்றே நிகழ்ச்சியில் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது.