அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகை வித்யா பாலன், தற்போது தும்ஹாரி சுலு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 1 ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில் மத்திய திரைப்பட தணிக்கை துறை உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வித்யா பாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது பற்றி வித்யா பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய திரைப்பட தணிக்கை துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. உறுப்பினர் என்ற முறையில், எனது பொறுப்புகதள திறம்பட செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது நமது சினிமா சமுதாயத்தின் உணர்வுகள், யதார்த்தங்கள் மற்றும் பிரச்னைகளை பேசி வருகிறது. இதனை புதிய பாதைக்கு, முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்ல பாடுபடுவேன் என்றார்.