விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
உ.பி., மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 குழந்தைகள் உயிரிழந்தன. இச்சம்பவம் தொடர்பாக உ.பி., முதல்வருக்கு, நடிகர் கமல் டுவிட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உபி.,யில் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு நடவடிக்கை எடுக்க கைலாஷ் சத்யார்த்தி உ.பி., முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது போன்று இனியும் நிகழக் கூடாது. இச்சம்பவத்தால் இந்தியாவே துயரத்தில் ஆழ்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது பற்றி கருத்து தெரிவித்துள்ள கமல், நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள் என தெரிவித்துள்ளார்.