அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றபோது அதிகப்படியான வாக்குகள் பெற்றிருந்தார் என்பதோடு, அவரை பிக்பாஸில் உள்ளவர்கள் யாரேனும் திட்டினால் கூட ஓவியாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்தனர். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார் ஓவியா.
ஒரு கட்டத்தில் அவர் ஆரவை காதலிப்பதாகவும், அதையடுத்து ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளாததால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. அதன்பிறகு பிக்பாஸில் இருந்து வெளியேறினார் ஓவியா. இந்த நிலையில், ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், அவர் மீது பிக்பாஸ் செட் போடப்பட்டிருக்கும் சென்னையை அடுத்துள்ள நசரத் பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஓவியாவுக்கு போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம். அதனால் விரைவில் நசரத் பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி ஓவியா விளக்கமளிப்பார் என்று தெரிகிறது.