அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
டிவி சேனல்கள் தங்களது டிஆர்பியை உயர்த்த வேண்டும் என்பதற்காக சாதாரண பேட்டிகளில் கூட பிரச்சினைககளை உண்டு பண்ணி வருகிறார்கள். அந்தவகையில், சில வாரங்களுக்கு முன்பு, நடிகர் தனுஷ் விஐபி-2 படத்தின் பிரமோஷனில் ஈடுபட்டிருந்தபோது ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவரை டென்சன் செய்வது போல் கேள்வி கேட்டதால் மைக்கை பிடுங்கி எரிந்து விட்டு வெளியேறினார் தனுஷ்.
அதேபோல் சமீபத்தில் நேனே ராஜூ நேனே மந்திரி படத்தின் விளம்பரத்திற்காக நடிகர் ராணாவும் டிவி 9 என்ற தெலுங்கு சேனலுக்காக பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளினி, ஆந்திராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை நடைபெற்று வந்த போதை பொருள் வழக்கு சம்பந்தமான விசாரணை குறித்து ராணாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார். முக்கியமாக, அவருக்கும் அதில் தொடர்பு இருப்பதைப்போன்று கேள்வி கேட்க தொகுப்பாளினியிடம் தனது கோபத்தை கைகளை நீட்டியபடி வெளிப்படுத்தியிருக்கிறார் ராணா. அதையடுத்து அது சம்பந்தமான கேள்விகளை நிறுத்திக்கொண்டார்களாம்.
ஆனபோதும், பின்னர் அந்த பேட்டியை சேனலில் ஒளிபரப்பியபோது, ராணாவிடம் போதை பொருள் சம்பந்தமாக தொகுப்பாளினி கேள்வி கேட்பதையும், அதற்கு ராணா கடும் கோபத்தை வெளிப்படுத்தியதையும் அப்படியே காண்பித்திருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த ராணா, இந்த வீடியோ போலியாக தயார் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார். அதோடு, ராணாவிடம் அந்த மாதிரி கேள்வி கேட்ட தொகுப்பாளினியை ராணாவின் ரசிகர்களும் எச்சரித்து வருகிறார்களாம்.