டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிரஞ்சீவி, விஜயசாந்தியைத் தொடர்ந்து பவன் கல்யாணும் சமீபத்தில்தான் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அவர்களைத் தொடர்ந்து ரஜினியும் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது கன்னட நடிகர் உபேந்திராவும் புதிய கட்சி தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார்.
கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர் உபேந்திரா. தமிழில் விஷால் நடித்த சத்யம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அவர் நடித்திருந்தார். தற்போது கன்னடத்தில் உப்பி ருப்பி -என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான், கர்நாடகத்தில் வரப்போகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தனி கட்சி தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார் உபேந்திரா. மேலும், எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு பலப்பரீட்சை காணப் போகிறாராம்.
இந்த தகவல் தற்போது ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ள உபேந்திரா, தன்னை மக்கள் தேர்ந்தெடுத்தால் ஊழலை ஒழிப்பதுதான் எனது முதல்வேலை என்றும் தெரிவித்துள்ளார்.