ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். இந்த படங்களில் புதுப்பேட்டை-2 படம் விரைவில் உருவாகயிருப்பதாக என்று முன்பு செய்திகள் வெளியாகி வந்தன. பின்னர் அதுகுறித்த பேச்சே இல்லை.
இந்தநிலையில் சமீபத்தில், பேஸ்புக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் தனுஷ். அப்போது புதுப்பேட்டை-2 எப்போது உருவாகிறது என்று சிலர் கேட்டனர். அதற்கு, நான் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் புதுப்பேட்டை. என்னை நடிப்பில் இன்னும் தேர்ச்சி பெற செய்த படம். அண்ணன் இல்லாமல் இந்தப்படம் நிச்சயம் உருவாகி இருந்திருக்காது. அதோடு அந்த படம் வெளியானபோது ஹாலிவுட்டிலும் விமர்சிக்கப்பட்டது.
அத்தனை சிறப்பான அந்த படத்தை மீண்டும் எடுத்தால் அதை விட சிறப்பாக எடுக்க வேண்டும். கொக்கி குமாருக்கான கதையை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அவ்வளவு எளிதல்ல. முதல்பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எண்ணுவார்கள். ஆனால், அதுகுறித்து எந்த ஐடியாவும் இப்போதைக்கு எனக்கு இல்லை, எதிர்காலத்தில் எப்படி அது நடக்கிறது என்று பார்க்கலாம் என தெரிவித்தார் தனுஷ்.