டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளம், தமிழை தொடர்ந்து, தற்போது நேரடி தெலுங்கு படமாக உருவாகும் 'மகாநதி' மூலம் தெலுங்கிலும் அடியெடுத்து வைத்துள்ளார் துல்கர் சல்மான். இந்தநிலையில் பாலிவுட்டில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் வாய்ப்பும் அவரை தேடி வந்துள்ளது. தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தவிர இந்தப்படத்தில் இர்பான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஆரம்பத்தில் துல்கருக்கு பதிலாக அபிஷேக் பச்சன் தான் இந்த கேரக்டரில் நடிப்பதாக இருந்ததாம்.. ஆனால் அபிஷேக்கின் தேதிகள் ஒத்து வராததால், துல்கர் சல்மான் இந்தப்படத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளார்.. இந்த வாய்ப்பு துல்கரை தேடிவர அவர் நடித்த சார்லி படம் தான் காரணமாம்.
மணிரத்னம் படம் என்பதால் 'ஒ காதல் கண்மணி' படத்தை பார்த்த இயக்குனர் ஆகர்ஷ் குரானா, அதில் துல்கரின் நடிப்பு தன்னை ஈர்க்கவே தொடர்ந்து அவர் நடித்த படங்களை பார்க்க ஆரம்பித்தாராம். 'சார்லி' படத்தில் துல்கரின் மிகச்சிறப்பான நடிப்பை பார்த்தபோது தனது படத்திற்கு இவர் தான் செட்டாவார் என முடிவு செய்தாராம்.