'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தற்போது சிறையிலிருக்கும் மலையாள நடிகர் திலீப் மீண்டும் ஜாமின் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்தமுறை ஜாமின் மனுவில் தனது மனைவி, போலீஸ் அதிகாரி சந்தியா, இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோரைப் பற்றி சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து தனது தரப்பு நியாயத்தை விளக்கியுள்ளாராம் திலீப். அதாவது மஞ்சு வாரியருடன் விவாகரத்து மனு செய்து பிரிந்த பின்னர் தன்னைப்பற்றிய உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் வேலையில் மஞ்சு வாரியார் ஈடுபட்டார் என்றும் அதற்கு பக்கபலமாக விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இருந்தார் என்றும் குற்றச்சாட்டை அதில் தெரிவித்துள்ளார்..
இந்த ஸ்ரீகுமார் மேனன் வேறு யாருமல்ல மோகன்லால் அடுத்ததாக நடிக்கவுள்ள 'ஒடியன்' மற்றும் மிக பிரமாண்டமாக உருவாக இருக்கும் 'மகாபாரதா' ஆகிய படங்களை இயக்க உள்ளவர் இவர்தான். இதில் ஒடியன் படத்தில் மஞ்சு வாரியார் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தவிர திலீப்பின் வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரியான ஏ.டி.ஜி.பி சந்தியா மீதும் அவர் ஒரு சார்பாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார் திலீப்.
வழக்கு விசாரணையின்போது தன்னை விசாரித்த ஏ.டி.ஜி.பி சந்தியா, மஞ்சு வாரியருக்கும் ஸ்ரீகுமார் மேனனுக்கு என்னவிதமான சம்பந்தம் என்பது குறித்து தான் பேசும்போது அதை மட்டும் கவனமாக வீடியோவில் ரெக்கார்டு பண்ணாமல் தவிர்த்துவிட்டார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் தவிர தியேட்டர் தொழில் தனக்கு எதிராக செயல்பட்டு வந்து முன்னாள் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவரான லிபர்ட்டி பஷீர் மீதும் தனது ஜாமின் மனுவில் குற்றம் சுமத்தியுள்ளாராம் திலீப்.