டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முன்பெல்லாம் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், அவற்றை தொகுத்து வழங்கினால் சினிமாவில் தங்களுக்கான இமேஜ் சரிந்துவிடும் என முன்னணி நடிகர்கள் பயந்த காலமும் உண்டு. ஆனால் இன்று சின்னத்திரையின் வீச்சு அதிகமென்பதால் மக்கள் மனதில் இடம்பிடிக்க கூடிய நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைவதால் இமேஜ் இன்னும் உயரவே செய்யும் என்பதை புரிந்துகொண்டார்கள் சில நடிகர்கள். ஆமீர் கான், சல்மான் கான், சூர்யா, சரத்குமார், சுரேஷ்கோபி ஆகியோர்கள் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக சின்னத்திரைக்குள் வந்தது இப்படித்தான்.
தற்போது கடந்த ஒரு மாத காலமாக கமல், 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரை ரசிகர்களை தன் வசம் இழுத்துக்கொண்டுள்ளார். இதனால் அவரது மதிப்பு இன்னும் உயரவே செய்துள்ளது என்பது கண்கூடு. அந்தவகையில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் முதன்முதலாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அம்ரிதா டிவி என்கிற சேனலில் 'லால் சலாம்' என்கிற பொழுதுபோக்கு நிகழ்ச்சியை மோகன்லால் தான் நடத்த இருக்கிறார். விரைவில் துவங்கவுள்ள இந்த நிகழ்ச்சிக்கான லோகோவை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மோகன்லால்.