'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள நடிகர் திலீப் கைதானதும் மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துபோனதென்னவோ உண்மை தான். அதனால் தான் மம்முட்டி, மோகன்லால் உட்பட சீனியர் நடிகர்கள் கூட, நடிகர் சங்க பொதுக்குழு என்கிற பெயரில் கருத்துக்களை தெரிவித்ததோடு மட்டும் நின்றுவிட்டார்கள்.. திலீப்புக்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்த கருத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.. ஒருசில சிறிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மட்டுமே தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.
அந்தவகையில் திலீப் விவகாரம் குறித்து, பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் தற்போது தனது கருத்துக்களை கூறியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய சீனிவாசன், “இப்படியெல்லாம் செய்தால் என்னவெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாத அளவுக்கு திலீப் ஒன்றும் முட்டாள் அல்ல. அவருடன் பழகிய காலத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் நன்கு ஆலோசித்து முடிவெடுப்பதை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன்” என கூறியவர், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து அதிகம் பேச மறுத்துவிட்டார்.