பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
நடிகை கடத்தல் விவகாரத்தை இந்த அளவுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி, பூதாகரமாக்கியத்தில் கேரள மீடியாக்களும் நிறைய பங்கு உண்டு.. ஆனால் மீடியாக்களின் இந்த அதிரடியை மலையாள நடிகர் சங்கம் ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.. குறிப்பாக திலீப் பக்கம் தவறு இல்லாதது போல கருத்து கோரிய நடிகர்சங்க தலைவர் இன்னொசன்ட்டை அதிரடி கேள்விகளால் தடுமாற வைத்தன மீடியாக்கள்.. இதனால் நடிகர்சங்கத்தில் புதிய ஒரு முடிவை எடுத்துள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது..
அதாவது நடிகர்சங்கத்தை சேர்ந்த யாரும் வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு டிவி சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ, பத்திரிகைகளில் சிறப்பு பேட்டி அழிக்கவோ கூடாது என்பதுதான் அந்த முடிவாம்.. ஆனால் நடிகர் பிருத்விராஜுக்கு சங்கத்தின் இந்த முடிவில் உடன்பாடு இல்லையாம்.. ஆரம்பத்தில் இருந்தே மீடியாக்கள் மீது தனி பாசம் வைத்துள்ள பிருத்விராஜ், இந்த முடிவை மீற தயாராகிவிட்டாராம். நடிகர்சங்கம் இப்படி ஒருவு முடிவெடுத்திருப்பது உண்மை என்றால் வரும் ஓணம் சீசனில் அனைத்து சேனல்களிலும் பிருத்விராஜின் நிகழ்ச்சிகளாக மட்டுமே பார்க்கமுடியும் என்றும் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.. இனி அது என்ன புதிதாக குட்டையை குழப்ப போகிறதோ தெரியவில்லை.