'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிறு இடைவெளிக்கு பின், மீண்டும் நடிக்க வந்துள்ள ப்ரியா ஆனந்த், கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் மூலம், ரசிகர்கள் மனதில் கண்டிப்பாக, தனக்கும் ஓர் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், நம்மிடம் பேசுகிறார்.
கூட்டத்தில் ஒருத்தன் படம் பற்றி?
புதுமுக இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். ஒரு சாதாரண மாணவன், அவன் எதிர்காலத்தில் என்ன ஆகிறான், அவன் கனவு நிஜமானதா, இல்லையா என்பதை சொல்லும் படம் இது. இந்த படத்தை பார்க்கும் அனைவருக்கும், நம்மாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கண்டிப்பாக ஏற்படும்.
இதில் உங்கள் கேரக்டர் என்ன?
ஜனனி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். ரொம்ப பாசிட்டிவான ரோல். நான் படித்தது எல்லாம் அமெரிக்காவில்; இங்கு படிக்க, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னையில் உள்ள கல்லுாரியில் தான், இந்த படப்பிடிப்பு நடந்தது; இது, எனக்கு புது அனுபவமாக இருந்தது.
நடிப்பதை இடையில் தவிர்த்தது ஏன்?
என் தம்பி போல் இருந்த இரண்டு பேரின் மரணம், என்னை மிகவும் பாதித்தது. ஓர் ஆண்டாக, வீட்டை விட்டு வெளியில் வரவே இல்லை. எந்த விஷயம் மீதும், விருப்பம் இல்லாமல் இருந்தது. இந்த படத்தின் இயக்குனர் கதையை கூறியதும், மனது மாறி, மீண்டும் நடிக்க வந்தேன்.
அழகின் ரகசியம் எது?
மனது, சந்தோஷமாக இருந்தால், அது, முகத்தில் தெரியும். சோகம், வருத்தம், இழப்பு, மனதளவில் ஏற்படும் காயங்கள் யாரையும் சந்தோஷமாக வைப்பதில்லை. மனது சந்தோஷமாக இருந்தால், அழகு தானாக வந்து விடும்.
ஸ்ரீதேவியுடன் நடித்த அனுபவம்?
சின்ன வயதில் இருந்தே, ஸ்ரீதேவி மேடத்தை ரொம்ப பிடிக்கும். அவர்களின் ரசிகை நான். இங்கிலீஷ் விங்கிலீஷ் படப்பிடிப்பின் போது கூட, நான் அவர்களுடன் சேர்ந்து, ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியல. மீண்டும் அவர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், நடிக்க ஆர்வத்தோடு இருக்கேன்.
கவுதம் கார்த்திக், அதர்வாவுடனான நட்பு?
கவுதம், நடிகராவதற்கு முன்பே, எனக்கு தெரியும். நிறைய பேசுவோம்; பகிர்ந்து கொள்வோம். அதர்வா, எனக்கு படப்பிடிப்பின் போது தான் பழக்கம். அதன்பின், அசோக், நிவாஸ், இந்த நான்கு பேரும் எனக்கு சிறந்த நண்பர்கள் தான். வெளியே பார்ப்போம்; பேசுவோம். எனக்கு பிடித்த நண்பர்கள் இவர்கள்.
ஜி.எஸ்.டி., வரியால் சினிமா துறை பாதிப்பு அடைந்துள்ளதாக சொல்வது பற்றி?
நிஜமாகவே இது சீரியசான விஷயம். பணப்புழக்கம் நிறைந்த தொழில் இது. எல்லாரும் இப்போது பாதிக்கப்படுவது உண்மை தான்; இது எல்லாத்துக்கும் தற்காலிக முடிவு கிடைக்காமல், நிரந்தரமான நல்ல முடிவாக கிடைக்க விரும்புகிறேன். நம் நாட்டின் அடையாளம் சினிமா மற்றும் கிரிக்கெட். நான் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்ததே, தமிழ் படங்களில் நடிப்பதற்காக தான். சினிமா காப்பாற்றப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.
கமல் தனி ஆளாக, சில விஷயங்களை சொல்லி வருவது பற்றி?
கமல் சார், இந்த துறையில் அனுபவம் மிக்கவர். சிறிய வயதில் இருந்து, சினிமாவில் நடிகராக, தயாரிப்பாளராக, இயக்குனராக பல பணிகளை, திறம்பட செய்து வருகிறார். யார் பேசினால் என்ன; அது எங்கு போக வேண்டுமோ, அங்கே போய் விடுகிறது; அதுபோதும்.
இப்போது ஓவியா பற்றித் தான், சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது; இதுபற்றி...
எனக்கு ஓவியாவை ரொம்ப பிடிக்கும். அந்த நிகழ்ச்சியை நானும் பார்க்கிறேன். நெருக்கடியான சூழ்நிலையை, ரொம்ப சாமர்த்தியமாக சமாளிக்கிறாங்க.
பூர்வீகமான மாயவரத்துக்கு போவது உண்டா?
என் தாத்தாவோட வீடு, அங்கே தான் இருக்கு. ரொம்ப அழகான ஊர். பக்கத்தில் ஓர் அரசு பள்ளி இருக்கு. அங்கெல்லாம் போய் விளையாடி இருக்கேன்.
திருமணம் எப்போது?
அந்த ஐடியா இப்போ இல்லை. ஆனால், எனக்கு, எங்க வீட்டில் மாப்பிள்ளை தேட மாட்டாங்க. என்னுடன் நெருங்கி பழகிய, நன்றாக தெரிந்த நபரை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்.