அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சசிகலா பாணியில், நடிகர் திலீப் கேரள கிளை சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆலுவா கிளை சிறை
சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது சமீபத்தில் அம்பலமானது. நடிகை பாவனா கடத்தப்பட்டு, மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைதான நடிகர் திலீப், கேரளாவில் ஆலுவா நகரில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர், திருட்டு வழக்கில் கைதாகி அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திலீப்பிற்கு தேவையான உதவிகளை செய்து தர, அவரை சிறை அதிகாரிகள் அனுப்பி உள்ளனர். அத்துடன் சிறை சமையல் அறையில் அதிகாரிகளுக்கு சமைக்கப்படும் சிறப்பு உணவு தான் திலீப்பிற்கு வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. திலீப்பின் துணிகளை துவைப்பது, சாப்பாட்டு தட்டுகளை கழுவுவது, கழிவறையை சுத்தப்படுத்துவது போன்ற பணிகளை அந்த கைதி பார்த்து கொள்கிறார்.
வழக்கமாக, சிறை வராண்டா பகுதிக்கு உணவு கொண்டு வரப்படும். கைதிகள் வரிசையில் நின்று உணவை பெற வேண்டும். ஆனால், இரண்டு நாட்களாக திலீப்பிற்கு சிறப்பு உணவு வழங்கப்படுகிறது. மற்ற கைதிகள் உணவு சாப்பிட்ட பிறகு தங்கள் அறைகளுக்கு சென்று விடுவார்கள். அதன் பிறகு திலீப் சமையல் அறைக்கு சென்று சிறப்பு உணவை சாப்பிட்டு வருகிறார்.
தனி குளியல்
அதேப்போல், குளியல் விஷயத்திலும் திலீப்பிற்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கைதிகளுடன் பொது வெளியில் குளிக்காமல், தனியாக குளிக்கிறார். மற்ற கைதிகள் குளித்து விட்டு அறைக்கு சென்ற பிறகு திலீப் சென்று குளிக்கிறார்.